செவ்வாய், மார்ச் 22, 2016

கள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை



                    ள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு புதன்கிழமை இரவு வந்த இலங்கை வவுனியா காந்திகுளத்தைச் சேர்ந்த த.மோகன்தாஸ் (22), வேலை கேட்டு மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

பாஸ்போர்ட், விசா ஆகியன தன்னிடம் இல்லை என தெரிவித்த அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவர் கள்ளப்படகு மூலம் ராமேசுவரம் வந்து, அங்கிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது. 

இதில், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தமிழகத்துக்குள் நுழைந்தது தவிர மோகன்தாஸ் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்போ, குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணமோ அவரிடம் இல்லை என போலீஸார் இலங்கை துணை தூதரகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

இதையடுத்து, மோகன்தாஸ் மீதான சட்டரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்து, இலங்கை அனுப்புவதற்கு முயற்சிகளை இலங்கை துணை தூதரகமும், சென்னை காவல்துறையும் மேற்கொண்டுவருகின்றன.

இதற்காக அவருக்கு தாற்காலிகமாக பாஸ்போர்ட் வழங்குதற்கு இலங்கை துணை தூதரகம் சம்மதித்துள்ளது என்றும் ஒரிரு நாள்களில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதால் அவர் வேப்பேரி காவல் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளி, மார்ச் 18, 2016

இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் இப்போது புழல் ஜெயிலில்.





த.மோகன் தாஸ் (வயது 22)இலங்கை வவுனியா காந்தி குளம்

             புதிய விடியலை நோக்கி இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் ஒருவன் இப்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறான். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வவுனியா காந்தி குளத்தைச் சேர்ந்த த.மோகன் தாஸ் (வயது 22) என்ற இளைஞர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கள்ளத் தோனி மூலம் இராமேஸ்வரம் வந்திருக்கிறார். தனது தந்தை இறந்துவிட்ட நிலையில், தனக்கான் புதிய வாழ்வை இந்தியாவில் தொடங்க அந்த அப்பாவி இளைஞன் வந்திருக்கிறான். சிலநாள்கள் சுற்றித் திரிந்த பின் மதுரைக்கு வந்து, சிம்கார்டு வாங்கி தனது குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார்.
பணம் முழுமையாகச் செலவானதால் சென்னைக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணச்சீட்டு இன்றி வந்து, பல்வேறு நிறுவனங்கள், கடைகளில் வேலை கேட்டு யாரும் அளிக்காததால் சாலையோரத்தில் தங்கியதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டால் வேலை கிடைக்கும் என சிலர் கூறவே சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவகத்திற்கு வந்திருக்கிறார்.
இலங்கை தமிழரான தனக்கு வேலை வாங்கித் தருமாறு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்டபோது, அந்த இளைஞர் தன்னிடம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். அவரைப் பிடித்து வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடந்தி , அவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என க்யூ பிரிவு போலீஸார் விசாரித்தனர். எவ்வித ஆவணமும் இன்றி கள்ளப்படகில் வந்ததாக மோகன்தாûஸ கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார்.
()()()()()
"சிங்களர்கள் ஆக்கிரமிப்பால் பறிபோன வாழ்வாதாரம்'
தமிழகம் வந்ததற்கான காரணம் குறித்து போலீஸாரிடம் மோகன்தாஸ் கூறியதாவது:-
போருக்கு பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிங்களர்களை குடியமர்த்தி வருகின்றனர். இதற்காக தமிழர்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் சிக்கியுள்ளனர். வெளிநாடு செல்ல முறையாக கடவுச்சீட்டு, விசா பெறுவது இயலாத காரியம். ஆகவே, சிலரிடம் கடன் பெற்று கள்ளப்படகில் தமிழகம் வந்தேன். இங்கு கடவுச்சீட்டு, விசா பெற்று மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.
வேலை கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபோது, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரகத்துக்கு செல்லும்படியும் சிலர் கூறினர். ஆனால், தவறாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, சிக்கினேன் என்றார்.
பால் மணம் மாறாத அந்த முகத்தை பார்க்கும் போது, மனம் பதபதைக்கிறது. இந்த சிறு வயதில் நாடு விட்டு நாடு வந்து இப்படி சிறையில் மாட்டிக் கொண்ட அந்த இளைஞனுக்கு என்ன உதவி செய்வது என்று தெரியவில்லை. அவனது வாழ்க்கை எப்படி மாறும் என்றும் புரியவில்லை?. அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது. எப்படி என்றுதான் புலப்படவில்லை.
பொழுது விடியட்டும் என்று காத்திருக்கிறேன்.
18/03/2016.

புதன், மார்ச் 16, 2016

யோனியில் உறைந்திருக்கும் சாதி?.





                ந்த கொடூர கொலையை வாட்ஸ்ப்பில் பார்க்கும் போது மனம் பதபதைக்கிறது. மனித நிலை கடந்த மிருக நிலையில் வீசும் அரிவாள், சதைகளை பிளந்து அந்த இளம் ஜோடியின் வாழ்க்கையை வெட்டி வீழ்த்துகிறது.
கொலையாளிகளின் வெறி கூச்சல், கணவனின் மரண ஓலம், சுற்றி ஆயிரம் பேர் இருந்தும் உதவிக்கு வராத மனிதர்கள் என்று உயிரற்ற கணவனின் உடலின் அருகில் அவள் சிலைபோல் நிற்கிறாள். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன் நிகழ்வு அவளிடமிருந்து அகலுமா...?. அதை நினைக்கும் போதெல்லாம் செத்து செத்து பிழைப்பாளே அந்த அப்பாவி பெண். அவளுக்கு இ(அ)ந்த சமூகம் என்ன செய்துவிட போகிறது?.

காதலிப்பது குற்றம் என்றால் இந்த உலகத்தில் எல்லோருமே குற்றவாளிகள்தான். மகள் காதலிப்பது பிடிக்கவில்லையா...?. ஊர் பொது பஞ்சாயத்தில் வைத்து பேசி முடிவெடுங்கள். இல்லை இரு குடும்ப பெரியவர்கள் பேசி முடிவெடுங்கள். இரு தரப்பும் காவல் துறை முன்னணியில் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். சம்மந்தப்பட்டவர்கள் தங்களது ஆசை மகனோ/மகளோ என்கின்ற போது இத்தகைய அணுகுமுறைகள் நிச்சயம் உயிர் பலிகளை தடுக்கும்.

"இதெல்லாம் நடக்கிற காரியமா...?" என்று நீங்கள் கேட்கலாம்?. முன்னேறிய நாகரிக சாதி என்றால் இதைக் கேட்கும், முட்டாப் பய சாதி என்றால், சாதிக்காக முண்டா தட்டும்.
கற்பனையில் இருக்கும் 'சாதி' என்ற பீ பெருமைக்காக மண் தின்னும் இந்த மடையர்களை எப்படி நல்வழிப் படுத்துவது?.

கொலைக்கு பின்னர் கோர்ட்டு கேஸு என்று அலையும், அந்த கொலைகாரக் குடும்பத்தை, சொந்த சாதியினரே வெறுத்தொதுக்குவார்கள் என்பது நாம் அறியாத உண்மை.

சங்கர்-கவுசல்யா திருமண கோலத்தில்


காதல் போய், காதல் கணவன் உயிர் போய், மகள் காலம் முழுவதும் கண்ணீர் சிந்துவதற்கு, கொளரவம் பார்க்காமல் பேசி முடிவெடுப்பது நல்லதுதானே....?. அதைவிடுத்து காதல் பிரச்சனைக்கு காதலனை அல்லது காதலியை கொல்வது ஒன்றுதான் தீர்வு என்று நினைப்பது எத்தனை கொடூரம்?.



மகளின் காதலை அழித்து, அவளின் காதலனை கொடூரமாய் கொன்று, குடும்பமே கொலை பழி சுமந்து, வாழ்க்கை முழுவதும் துயரம் தரித்து... அப்படி என்ன வாழ்க்கையை....., அந்த பெண்ணுக்கு அந்த பெற்றோர்கள் தந்துவிடப் போகிறார்கள்?

புதன், மார்ச் 02, 2016

குவைத்தில் மாபெரும் வீடு மற்றும் வீட்டு மனை கண்காட்சி!.


  


       ந்திய பத்திரிகை உலகில் முன்னணி நாளிதழான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்/தினமணி மற்றும் எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனம்  இணைந்து நடத்தும் சர்வதேச ரியல் எஸ்டேட் கண்காட்சி குவைத்தில் நடைபெறுகிறது.  இவ்வீட்டு மனை கண்காட்சியை VGN டெவலெப்பர்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.

இம் மாதம் (மார்ச்) வரும் 4 & 5ம் தேதிகளில் குவைத் சால்மியாவில் ஹோட்டல் ஹாலிடே இன், ஹல்தானா அரங்கில்  இக் கண்காட்சி நடைபெறுகிறது. ( ‘India Realty Show’ in Hotel Holiday Inn, Salmiya Kuwait on 4th & 5th of March ’16) இதில் முப்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட புராஜெட்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன. இக் கண்காட்சியில் தமிழ் நாடு, கேரளா, ஹைதராபாத், பெங்களூர் முதற்கொண்டு, இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்  கலந்துக் கொள்கின்றன.

இந்தியாவின் பிரதான நகரங்களில்,  மக்கள் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வீட்டு மனை, அடுக்கு மாடி குடியிருப்புகள், தனி வீடுகள் (வில்லாக்கள்) வாங்கக் கூடிய வாய்ப்பினை இக் கண்காட்சி வழங்குகிறது.

இக் கண்காட்சியில் உடனடி வீட்டுக் கடன் வசதியையும் எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனம் வழங்கிறது.  குவைத் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு  ஒரு அரிய வாய்ப்பு .

அன்போடு அழைக்கிறோம், அனைவரும் வருக!.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...