ஞாயிறு, ஜனவரி 13, 2013

உலகப்புகழ் பெற்ற 'பட்டாம்பூச்சி' நாவல் தமிழில் .

              
                 ஹென்றி ஷாரியர் எழுதிய 'பட்டாம்பூச்சி' பிரஞ்சு நாவல் குமுதத்தில்தொடராக வெளிவந்த போது எனக்கு என்ன வயது என்று தெரியவில்லை. ஆனால் அக்கதையை யாருக்கும் தெரியாமல் பாய்க்கு அடியில் மறைத்து வைத்து படித்தது உண்டு.                                                                  
  
கதை நாயகன் செய்யாத குற்றத்திற்காக சிறையில்   இருப்பான். சிறையில் இருந்து தப்பிக்க பல வழிகளில் முயலுவான். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு சிகரெட்டை கடத்த கரப்பான் பூச்சியை பயிற்றுவித்திருப்பான் என்று கதை படிக்க படிக்க விறுவிறுப்பாக மயிர்கூச்செறியும் வகையில் நகரும். இது மட்டும்தான் எனக்கு ஞாபகம் இருக்கு.

இப்போது 'பட்டம்பூச்சியை' மீண்டும் நர்மதா பதிப்பகத்தில் பிடித்துள்ளேன். ரா.கி. ரங்கராஜனின் மொழி பெயர்ப்பு ஆளுமையில் உச்சம் தொட்ட நாவல் இது. இக் கதையை மீண்டும் படிப்பது எனது பால்ய காலத்தில் நுழைவது போல் இருக்கிறது.

இக் கதை குமுதத்தில் எந்த வருடம் வெளிவந்தது என்று தெரியவில்லை. தெரிந்தால் எந்த வயதில் இக் கதையை படித்தேன் என்று தெரிந்துவிடும்.

2 கருத்துகள்:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் ( 24.02.2013 ) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 24.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான புத்தகம். நான் தொடர்கதையாக வந்த போது படித்தேன். புத்தகமாக வந்த போது வாங்கி படித்து ஒரு மாணவிக்கு பரிசாக அளித்து விட்டேன்.
வாழ்க்கையின் மீது, போராட்ட உணர்வின் மீது மிகவும் நம்பிக்கை ஊட்டும் புத்தக்ம்.
நன்றி தமிழன் வீதி.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...