திங்கள், அக்டோபர் 03, 2011

குமுதத்திலிருந்து வரதராஜன் நீக்கம்: பதிலடித் தந்த ஜவஹர் பழனியப்பன்.

வரதராஜன் வெளியீட்ட அறிக்கை


 குமுதம் விவகாரம்: பதிவு 2

எனது முந்தைய பதிவின் கடைசி பாராவில் ஜவஹர் பழனியப்பனிடமிருந்து பதில் அறிக்கை வரப்போகிறது என்று தெரிவித்திருந்தேன். அது நடந்து விட்டது.   முந்தைய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.


குமுதம் பதிப்பாளர் வரதராஜன்  வெளியிட்ட விளம்பரத்திற்கு, பதிலடித் தந்து   'காஷன் நோட்டிசை' (எச்சரிக்கை அறிக்கை) வெளியீட்டார் ஜவஹர் பழனியப்பன்.

நேற்று அதாவது ஞாயிறு அன்று காலை வந்த ஆங்கில தினசரிகளில்குமுதம் பதிப்பாளர் வரதராஜன்,  குமுதம் நிர்வாக இயக்குனர் ஜவஹர் பழனியப்பனை நீக்கி ஒரு 'காஷன் நோட்டீஸ்' வெளியீட்டிருந்தார். இது தி ஹிண்டு நீங்களாக இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் மற்றும் டெக்கான் கிரானிககளில் வெளிவந்தது.

அதற்கு பதிலடித் தந்து இன்று காலை அதாவது 03/10/2011 திங்கள் அன்று அந்த விளம்பரம் வந்த அதே நாளிதழ்களுக்கு அதே அளவு விளம்பரம் ஒன்றை ஜவஹர் பழனியப்பன் தனது தாயின் பெயரில் எஸ்.ஏ.பி.கோதை ஆட்சி (நிறுவனர் எஸ்.ஏ.பி அண்ணாமலை அவர்களின் துனைவியார்) என்ற பெயரில் வெளியீட்டிருக்கிறார்.

ஜவஹர் பழனியப்பன் வெளியீட்ட அறிக்கை
இதில் பி.வரதராஜன் குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து, சென்னையில் 26/09/2011 அன்று நடந்த கம்பெனி போர்ட் மீட்டிங்கின் மூலம், சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்து ஒரு மனதான தீர்மானத்துடன் நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தில் பெயரில் வாங்கிய கடனுக்கும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கும்   தமது தாயாருமான திருமதி கோதை ஆட்சிதான் உரிமையாளர்    என்று அந்த அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுளளது.

அதோடு, இனி வரதராஜனை யாரும் தொடர்பு கொள்ளவேண்டாம் என்றும், ஒரு படி மேலே போய்,  அவர் நியமனம் செய்த ஊழியர்களோடு  யாரும் தொடர்பு வேண்டாம் என்றும்  ஜவஹர் பழனியப்பன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இப்படி போட்டி போட்டுக் கொண்டு வரும்  அறிக்கைகளால்,  குமுதம்  ஊழியர்கள் சற்று கலக்கத்துடனே இருக்கின்றனர்.  இனி யார் பின் செல்வது. இனி நிர்வாகம் கை மாறுமா, அல்லது இப்படியே நீடிக்குமா...? என்பது தெரியாமல் முழி பிதுங்கி நிற்கின்றனர்.

இந்த அறிக்கைக்குப் பின்னர் வரதராஜனுக்கு ஆளும்கட்சி  ஆதரவு இருப்பதாகவும், அதனால்தான் அவர் தைரியமாக  ஜவஹர் பழனியப்பனுக்கு முன்பாக முந்திக்கொண்டு அறிக்கை வெளியீட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஜவஹர் பழனியப்பனுக்கு, மத்தியில் ஆளும் கட்சி ஆதரவு  இருப்பதாவும் நம்பப்படுகிறது. 

 .  இரு தரப்பும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லாததால், இனி மோதல் கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 அதுவரை குமுதத்தின் நிலை......?                                                                                         

 

1 கருத்து:

shortfilmindia.com சொன்னது…

பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் http://udanz.com மில் உங்கள் பதிவுகளையும், ஓட்டுப்பட்டையையும் நிறுவி உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...