திங்கள், ஏப்ரல் 27, 2009

தமிழன் வீதி: 'காக்காஉட்கார பனம்பழம் விழுந்த கதை'

தமிழன் வீதி: 'காக்காஉட்கார பனம்பழம் விழுந்த கதை'


:"இந்திய அரசு தலையிட முடியாது" - கி. வீரமணி

தினமணியில் இன்று காலைவந்த செய்தி சற்று அதிர்ச்சி அளித்தது. நல்ல வேலை கீ . வீரமணி வியாலக்கம் அளித்துவிட்டார்.

"தினமணி" நாளேட்டில் இன்று காலை (27.4.2009) வந்துள்ள செய்தி வருமாறு:"இந்திய அரசு தலையிட முடியாது" என்ற தலைப்பிட்டு இன்று காலை (27.4.2009) வெளிவந்துள்ள "தினமணி" நாளேட்டில் - ஒரு செய்தி வெளிவந்துள்ளது. புதுவையில் நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை முழுமையாகத் திரித்து, தலைகீழாக்கி, விஷமத்தனமாக செய்தியை கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கத்தில் "தினமணி" வெளியிட்டுள்ளது.கெட்டபெயர் உண்டாக்கவே இந்த வேலைநமக்கும், நம் இயக்கத்திற்கும் கெட்ட பெயர் உண் டாக்கவே இந்த ஏற்பாட்டினை - "தினமணி" நாளேடு தவறான செய்தியை - வெளியிட்டுள்ளது.இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை; இதில் இந்திய அரசு தலையிட முடியாது என்று நான் கூறு வேனா? முழுப் போர் நிறுத்தம் தேவை, இலங்கையில் நடை பெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்திட மத்திய அரசு முன்வரவேண்டும் என்பதை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி 2008-லிருந்து வற்புறுத்தி, நாளும் எழுதியும், பேசிவரும் நிலையில் இப்படிக் கூறிட முடியுமா?கூறியது என்ன?அது உள்நாட்டுப் பிரச்சினை; அதில் தலையிட முடியாது. அங்கே சண்டை நடந்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது சகஜம்தான் (18.1.2009) என்று பேட்டி கொடுத்த ஜெயலலிதாவுக்கு இன்று ஈழத் தமிழர்கள்மீது வந்துள்ள திடீர் அக்கறை தேர்தலில் அதைக் காட்டி ஓட்டு வாங்குவதற்காகவே என்பதை விளக்கியும், தமிழ்நாடு முதல்வர் ஒரு மாநில அரசின் முதல்வர்; அவரைப் பொறுத்தவரை எவ்வளவு அழுத்தங்களை உச்சத்திற்குச் சென்று தர முடியுமோ அதனைத் தந்து கொண்டிருப்ப தால்தான் இந்த அளவுக்குச் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்ற கருத்துகளைத்தான் குறிப்பிட்டேன்.மறுப்புக் கடிதம் "தினமணி"க்கு!உடனிருந்த கழகப் பொறுப்பாளர்கள் உள்பட மற்ற ஏட்டாளர்களும் சாட்சி! பேட்டியின் ஒலிநாடாப் பதிவும் எம்மிடத்தில் உள்ளது.அதற்குரிய மறுப்பினை வெளியிட வேண்டும்.

"தினமணி"க்கே இப்படி ஒரு மறுப்பினையும் வெளியிட்ட கடிதம் ஒன்றை அதன் ஆசிரியருக்கு அனுப்பியுள்ளேன்.- கி. வீரமணி, தலைவர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 27.4.2009

தமிழன் வீதி: 'தமிழனின் ரத்தம் வஞ்சம் தீர்க்கும்'

தமிழன் வீதி: 'தமிழனின் ரத்தம் வஞ்சம் தீர்க்கும்'
More than a Blog Aggregator

'காக்காஉட்கார பனம்பழம் விழுந்த கதை'

நகைப்புக்கிடமான இந்த உண்ணாவிரதம் திடீரென்று முடிவுக்கு வந்துள்ளது.

திங்கள் காலை ஆபீஸ் வந்தவனுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை, டிவியில் உண்ணாவிரத அரங்கேற்றம் நாடகமாக நடந்துக் கொண்டு இருந்தது. அரசியலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்த அரசியல் வாதிகள்.
இந்த தேர்தலில் காங்கிரசை கழட்டிவிட்டு ப ம க, வீ.சி , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தாலே தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவை கலைஞர் பெற்றுஇருப்பர். அதை விட்டு இப்படி நாடகம் அடுவது நல்ல மனிதனுக்கு அழகல்ல.

ஒருபக்கம் தமிழ் ஈழம் அமைத்தே தீருவோம் என்கிறார் ஜெயலலிதா. இத்தனை நாள் எங்கு இருந்தார் இந்த அம்மையார். இந்த அரசியல் வாதிகள் விளையாட இலங்கை தமிழனின் உயிர் தான் கிடைத்ததா...?

அயிந்து மணி நேர உன்ன விரததாலே இலங்கை போரை கருணாநிதி முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் என்றால் இதை முன்பே செய்து இருக்கலாமே... அமெரிக்கா சொல்லியே கேட்காத இலங்கை அரசு கருணாநிதி சொல்லியா கேட்க போகிறது. இல்லை இலங்கை போரை சோனியா தலைமை ஏற்று நடத்துகிறாரா...?

இலங்கையின் போர் நிறுத்தம் 'காக்காஉட்கார பனம்பழம் விழுந்த கதை' ஆகிவிட்டது. எப்படியோ எம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

'தமிழனின் ரத்தம் வஞ்சம் தீர்க்கும்'

ஈழத்தில் தமிழன் படும் அவதி உலகில், சக தமிழன் பார்க்காதது. 'கல் தோன்றி மண் தோன்றா மூத்த மொழி தமிழ்' என்று கூறிவந்த நம் இனி என்ன பெருமை பேசி நம் இனத்தை வாழ வைக்கப்போகிறோம்?

இலங்கையை பூர்விக குடிகளாகக் கொண்ட இலங்கை தமிழர்கள், சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாக கொண்டு இலங்கையை ஒரு சொர்க்க பூமியாகப் படைத்தவர்கள். அப்படிப் பட்ட செல்வசீமான்கள் இன்று அதரவு இழந்து, சொத்து இழந்து, தனது உறவினர்களை பிரிந்து ரத்தம் சிந்தி இன்று சிங்களப் படைகளின் துப்பாக்கிமுனைகளில் கூனிக் குறுகி நிற்கின்றனர்.

ஏன் இந்த நிலை? இத்தனை ஆண்டுகாலமாக தொடர்ந்த போர் இன்று இறுதி நிலை வர யார் காரணம்?

ஒரே பதில் "இந்தியா"

சிங்கள போர் வெறியர்கள், தமிழர்களை வெறி கொண்டு தாக்க, பின் புலத்தில் யார் இருக்கிறார்கள்? புறமுதுகிட்டு ஓடிய சிங்கள இராணுவம் இன்று முன்னேறுவது எப்படி. இந்தியா என்ற ஒரு வல் ஆதிக்க சக்தி இந்த போரை புலிகளுக்கு எதிராக நடத்துகிறது என்பது தான் உண்மை.

இந்தியாவின் பரி பூரண அதரவு இருப்பதால், அமெரிக்க முதற் கொண்டு பல்வேறு உலக நாடுகள் வாய் திறக்க மறுக்கிறது. ராசிவ் காந்தியின் மரணத்திற்கு பழி வாங்கும் சோனியா மற்றும் காங்கிரஸ் கட்சியின் இந்த அணுகு முறைக்கு நாம் நிட்சயம் நல்ல பதில் அடி கொடுக்கவேண்டு. ராஜிவின் மரணத்திற்கு பழி வங்கவேண்டு என்று எம் இனத்தை அழிக்க நினைக்கும் நீங்கள், இந்திர காந்தியின் மரணத்திர்க்காக சீக்கியர்களை அழித்துவிடுவீர்களா?

இலங்கை தமிழனை கொள்ள தமிழ் நாட்டில் உள்ள விமான படைத் தளங்களை இந்திய அரசு பயன் படுத்துகிறது என்பதை நாம் அறிவோமா...? விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை இந்தியஅரசு, தமிழ் நாட்டின் கடற் கரையில் நின்று வேவூ பார்க்கிறது என்பதை நாம் அறிவோமா...? இவை எல்லாம் இங்கு உள்ள எல்லா அரசியல் நாய் களுக்கும் தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா ?

வோட்டுக்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கும் இந்த நாய்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வந்தால் ஓட ஓட விரட்டி அடியுங்கள். அது இன் நாளாக இருந்தாலும் சரி முன் நாளாக இருந்தாலும் சரி....

தமிழன் ஏமாளி அல்ல என்பதை வரும் தேர்தலில் நாம் உணர்த்தவேண்டும்.

தமிழ்நாட்டிலும் உலகிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் மனம் புழுங்கி, நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நித்தம் நித்தம் மனத் துயரில் குமுறிக் கொண்டு இருக்கின்றனர்.

ஏய் ....உலகமே... இந்தியாவே....

எம் மக்கள் சிந்தும் ரத்தத்திற்கு ஒரு நாள் நீ பதில் சொல்லத்தான் வேண்டும்.

தமிழனின் ரத்தம் இந்தியாவை வஞ்சம் தீர்க்கும்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...